
பூக்கடையில்
பூ வாங்கும்போதுதான் கவனித்தேன்
பூப்போன்றேவள் சிரித்தாள்...
பூவின் பெயர் என்னவென்று கேட்டேன்
பூதான்
அதன் பெயர் என்பது
அவளுக்கு நன்றாகவே தெரியும்
இருந்தாலும்
மல்லிகை என்றே மணத்தாள்...
தொடுத்தவள் விரல்களை
முத்தமிட்டிருந்த பூக்கள் முழங்கைவரை
சரசமாடி
என் கைகளுக்கு வந்து சேர்ந்தபோது
அதற்கும் ஒரு விலையிருந்தது...
- மு.முகமது பாட்சா*
20/04/2019
No comments:
Post a Comment