
பிரபஞ்சத்தின் பெருமூச்சு
ஸ்வரக் கூட்டல்களோடு புழுதியுயர்த்தி
பெருமான்மாவை அசைக்கிறது...
புனிதப்பாடல் இசைத்துக் கொண்டு
நாடோடியொருவன் நகர்கிறான்...
விழாக்காலப் பொம்மைகள் என்னை
விற்பனைச் செய்ய...
நான் தொலைந்தவிடத்தை
திருவிழா தேடிக் கொண்டிருக்கிறது...
-மு. முகமது பாட்சா*
14 /02 /2019
No comments:
Post a Comment