
5 வருடத்திற்கு ஒருமுறை
இப்படித்தான் நடக்கிறது...
அழையாத விருந்தாளிகளாக
வருகிறார்கள்!.... போகிறார்கள்!
நலம் விசாரிக்கிறார்கள்...
குறைகளைக் கேட்டுக்
குறித்துக் கொள்கிறார்கள்....
இவர் எப்பவுமே நம்மாளுப்பா என்று
சிபாரிசிக்கிறார்கள்....
'மறந்திடாதீங்க' என்று
தொலையாத ஞாபகத்தை
மீட்டெடுக்கிறார்கள்...
போடாம
எங்கப் போயிடப் போறாரென்று
சற்று மிரட்டியும் வைக்கிறார்கள்...
கடைசியாகக் காதில் வந்து
'ரூபாய் வந்திடும்னு' ஞாபகமாகச்
சொல்லிவிட்டுச்
சிரிக்கவும் செய்கிறார்கள்...
என்ன செய்வது ஏழைங்கன்னா
எப்பவுமே இப்படித்தான்.
- மு.முகமது பாட்சா*
21 /02 /2019
No comments:
Post a Comment