
தொடர்பில்லாத வரிகள்
ஒவ்வொன்றும்
ஏதோ சொல்ல வருகின்றன...
மனக்கூளம்
மாய்மாலம் பூசி நடிக்கின்றது...
மதுக்குடுவையில்
வரிகளைப் போட்டு உறிஞ்சுகிறவன்
வாசற்கதவைத் தேடிக் கொண்டிருக்கிறான்...
இரத்தச்சகதியில்
தோட்டாக்கள் உயிரிழந்திருக்க...
ஓலங்களைப் பாத்திரத்தில் நிரத்தி
வாக்குக் கேட்கிறார்கள்...
பிழைகளின் மீதுதான்
இங்கு, கிரீடம் நடந்து போகிறது...
சந்திப்பிழைக்காக ஒருவன்
வரிகளிடம்
சண்டையிட்டுக் கொண்டிருக்கிறான்...
சாவைக் கையில் வைத்துக் கொண்டு
சிலர் ஓடிக்கொண்டிருக்க...
சங்கீதப் பிழைக்காக
மதிப்பெண்கள் எத்துணைக் குறைவு?
- மு.முகமது பாட்சா*
16 /02 /2019
No comments:
Post a Comment