
ஒரு கோடு போட்டு
உட்கார்ந்து கொள்கிறேன்
என்னைச் சுற்றிலும் -
பல நூறுகோடுகள்
வரையப்பட்டிருக்கின்றன
கோடுகளைக்
கோலங்களாக மாற்றும் போது
பூக்கள்
என்னைச் சூழ்ந்து கொள்கின்றன...
பூக்களைப் பறித்து
மாலையாக்குகிறேன்
மணப்பெண்ணொருத்தி
தேடி வந்து நிற்கிறாள்
வாசம் நீ என்கிறேன்
வாசல் கதவினைத் திறந்து -
வாழ்ந்து பார் என்கிறாள்...
தோட்டம் பெரிதாகுகிறது
தோப்பின் மரங்கள்
நிழல் விரித்துப் படர்கின்றன...
அதன் கீழ்தான்
என் கல்லறை காற்றாறுகிறது...\
நான் அந்தக் கோடுகளை
தேடிக் கொண்டிருக்கிறேன்.
- மு.முகமது பாட்சா*
17 /02 /2019
No comments:
Post a Comment