Saturday, 16 February 2019

கோடு போட்ட தோட்டம்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

ஒரு கோடு போட்டு 
உட்கார்ந்து கொள்கிறேன் 
என்னைச் சுற்றிலும் - 
பல நூறுகோடுகள் 
வரையப்பட்டிருக்கின்றன 

கோடுகளைக் 
கோலங்களாக மாற்றும் போது 
பூக்கள் 
என்னைச் சூழ்ந்து கொள்கின்றன... 

பூக்களைப் பறித்து 
மாலையாக்குகிறேன் 
மணப்பெண்ணொருத்தி 
தேடி வந்து நிற்கிறாள் 

வாசம் நீ என்கிறேன் 
வாசல் கதவினைத் திறந்து - 
வாழ்ந்து பார் என்கிறாள்... 

தோட்டம் பெரிதாகுகிறது 
தோப்பின் மரங்கள் 
நிழல் விரித்துப் படர்கின்றன... 

அதன் கீழ்தான் 
என் கல்லறை காற்றாறுகிறது...\ 
நான் அந்தக் கோடுகளை 
தேடிக் கொண்டிருக்கிறேன். 

- மு.முகமது பாட்சா* 
17 /02 /2019 

No comments:

Post a Comment

Popular Posts