
தனிமை
என்னுள் வந்தமர்ந்தபோது
உறவுகள் விலகி நின்று
சிரித்துக்கொண்டிருந்தன...
நான் எனக்கென்ற முகமூடியை
வடிவமைக்கத் தொடங்கினேன்
அஃது எப்போதும்
சிரித்துக் கொண்டேயிருந்தது...
தோல்களில் வண்ணம் கூட்டிக்கொண்டேன்
கைகுலுக்கியவர்கள்
கண்சிமிட்டி மகிழ்ந்தார்கள்....
தனிமை
தனிமைப் பட்டு வெளியேற...
முகங்களைக் கழுவ
முகமூடிகளைக் கழற்றினோம்...
எல்லோருமே
என் முகத்தையே உடுத்தியிருக்க...
முகமூடிகள்
எங்களைப் பார்த்துச் சிரித்தது.
- மு.முகமது பாட்சா*
21 /02 /2019
No comments:
Post a Comment