Wednesday, 6 February 2019

இனம் காணாதவர்கள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

கிணறுகளை வெட்டி 
பூதங்களை எழுப்பப் பார்க்கிறார்கள்... 
இரத்தத்தைத் தெளித்து 
பெரும் காற்றில் ஊதுகிறார்கள்... 
மதங்களின் நூல் பிடித்து 
மகிமை மந்திரம் ஓதப்படுகிறது... 
சாதிகளின் பெயர்களைச்சொல்லி 
சாத்தான்கள் 
ஊர்வலம் போகின்றன... 
புனிதம் என்பதன் விளக்கத்தை 
அகராதி மாற்றிக்கொள்கிறது... 
மயானத்தின் 
எலும்புகளைப் பிரிக்கச்சொன்னால்... 
உறவுகளின் எலும்புகளைக்கூட 
இனம் காணாதவர்கள் 
கிணறுகளை வெட்டி 
பூதங்களை எழுப்பப் பார்க்கிறார்கள். 

- மு.முகமது பாட்சா* 
07 /02 /2019

No comments:

Post a Comment

Popular Posts