
எப்போது
என் காதல் தேசத்தைப் பார்ப்பது?
ஒளிந்துவிளையாடும் கண்ணாமூச்சியில்
நீ மட்டும் சிக்குவதேயில்லை...
உன் விதைப் புன்னகையைத் தூவிவிடு
ரோஜா வனம் மலரட்டும்....
மண்டியிட்டு அமர்ந்திருக்கிறேன்
வெளிச்சம் வெகு தூரத்தில் இருக்கிறது...
எந்த வார்த்தையில்
உன் நேசம் செவ்வதரமாய் ஒட்டியிருக்கும்?
சொற்கள் என்னை
விழுங்கிக் கொண்டே இருக்கின்றன...
நானொரு பரிதாபி,
காதலை யாசித்துக் கொண்டிருக்கிறேன்...
நீ என் வார்த்தைகளில்
யோசித்துக் கொண்டிருக்கிறாய்.
- மு.முகமது பாட்சா*
11 /02 /2019
No comments:
Post a Comment