உண்மை

என்னைத் தேடிக் கொண்டிருக்கிறீர்கள்
நானும்
உங்களைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன்...
நான் காணாமல் போனவன்
என் கேள்விகளுக்கு விடைத் தெரியாதவர்கள்
கடத்திச் சென்றிருக்கலாம்
என் கால்கள் கட்டப்பட்டிருக்கிறது...
நான் இறந்திருக்கலாம் என்பதும் கூட
ஒருவகை உண்மைதான்...
இருட்டில்
எனக்கான வெளிச்சம் இறந்து கிடக்கிறது...
பொய்யிடம் நீங்கள்
புகார் மனு கொடுத்திருக்கிறீர்கள்...
அவர்கள் தேடுவதுபோல்
நடித்துக் கொண்டேயிருக்கிறார்கள்...
பிரம்புகளோடு
நானும் சிதைந்திருக்கிறேன்....
என்றாவது ஒரு நாள்
நீங்கள் என்னைக் கண்டு பிடித்துவிடுவீர்கள்...
அப்போது நான்
காயங்களோடு இறந்திருப்பேன்...
என் மரணம் அரசியலாகி அரியணைத் தேடும்.
- மு.முகமது பாட்சா*
26 /02 /2019
No comments:
Post a Comment