
எனது வார்த்தைகளை
வயக்காட்டின் பக்கமாக ஓட்டிச்செல்கிறேன்..
சில வார்த்தைகள்
காய்ந்தப் புற்கள் மீது உரசி
தீப்பிடித்துக் கொள்கின்றன...
எலும்புகளின் சாம்பலைப் பூசிக்கொண்டு
ஒருவன்
அங்குமிங்கும் ஓடுகிறான்...
தண்ணீரைத் தேடி
தாகத்துடன் சில வார்த்தைகள்
நடந்து செல்கின்றன...
மலையொன்று அதிர்ந்து விதிர்க்க
துளையிடும் கருவியினருகே
சில வார்த்தைகள் இறந்து கிடந்தன...
மிச்சமிருந்த வார்த்தைகளை
தேடியபோது அவற்றை
கரையான் தின்று கொண்டிருந்தது...
இப்போது
நான் மட்டும் தனியாக ... என்
- மு.முகமது பாட்சா*
14 /02 /2019
No comments:
Post a Comment