
பதமான கத்தியொன்றால்
வெங்காயத்தை நறுக்கியவள்
மழையை ரசித்துச் சிரித்தாள்
மேகத்திற்கு யார்
இன்னல் செய்திருக்கக்கூடும்?
முட்டையை உடைக்கும் போது ,
அவனின் முறிவு
நினைவில் வந்து போனது...
இரவை உடுத்திக் கொள்வதாக
சொன்னவன்
பகலில்
புத்த சிற்பத்தோடு நடந்து செல்ல
அமைதி
அவளிடம் மட்டும் வந்து
அமர்ந்துகொண்டது...
வயிற்றிற்குள் எட்டி உதைத்த
வாழ்க்கையைத் தடவிப்பார்த்தாள்
'முட்டைத் தீய்ந்து கருகும் வாசனை'
- மு.முகமது பாட்சா*
13 /02 /2019
No comments:
Post a Comment