
கவிதை என்றால் என்ன?
சந்த மொழிக்குள்
சிந்து பாடுவதாக இருக்கலாம்...
சிந்துவாரத்தில் மூழ்கி
முத்தெடுப்பதாகவும் இருக்கலாம்...
கதைகள் புதைத்திருக்கும்
(க)விதைகளின் நுட்பம்
கவிதையாக இருக்குமோ?
'காற்றுடன் பேசும் வார்த்தை'
கவிதை என்கிறான்
அரபியக் கிழவனொருவன்...
ஆற்றோடு கடந்து போகின்றன
நாடோடியின் பாடல் வரிகள்...
காமம் சிந்தித்த வியர்வைதான்
காளிதாஸன் பாடலா?
காதல் சொல்லும் எளியவழி
கவிதையின் மொழியா?
சோம்பேறிகளின் சொல்மொழியென்று
ஒருவன் நகைக்கிறான்...
சொற்களின் பிறப்பிடமென்று
கவிஞர்கள் மறுக்கிறார்கள்...
உழைப்பவனைப் பாடும் மொழி
என்னவாக இருக்கும்?
உழைப்பவனே பாடும் மொழி
கவிதை என்று படித்திருக்கிறேன்...
உண்மையில்
கவிதை என்றால் என்ன?
- மு.முகமது பாட்சா*
18 /02 /2019
No comments:
Post a Comment