
சற்று நிதானித்து நடக்கிறேன்
ஆம்புலன்சின் சைரன் வேகமாகக் கடக்கிறது
பாடைப்பூக்கள்
மரணத்தின் வாசனையை நிறைக்க
ஸ்கூட்டியில் சென்றவள் மணக்கிறாள்...
மண்லாரி
ஆற்றினைத் திருடிக்கொண்டுபோக
குடங்களுடன்
ஒரு சில பெண்கள் நடந்து போகிறார்கள்...
கோக் பானத்தின் விளம்பரம்
குளிர்பான கடையை அறிமுகம் செய்கிறது...
சினிமா சுவரொட்டியை
மாடொன்று நாக்கால் நக்கி வழிக்க...
நாளைய முதல்வரென்று ஒரு நடிகரை
சுவரொன்று அறிமுகம் செய்கிறது...
இடிந்த வீட்டிற்குள்ளிருந்து
எல்.சி.டி திரையிசை, ' அதாரு அதாரு '
ஸ்கூட்டரொன்று வேகமாகச்செல்ல
ஒரு பெரும் சப்தம்
அடிபட்ட நாயைச் சுற்றிலும் வார்த்தைகள்...
'நாய்தானே
பராவாயில்ல நிதானமாப் போப்பா'
நான்
சற்று நிதானித்துதான் நடக்கிறேன்.
- மு.முகமது பாட்சா*
26 /02 /2019
No comments:
Post a Comment