
அந்தக் கொரியன் திரைப்படம்
அத்துணையொன்றும்
சுவாரசியமில்லை - அவன்
அவளிடம் பேசிக்கொண்டேயிருக்கிறான்
அவள் அவனிடம்
சண்டையிட்டுக் கொண்டேயிருக்கிறாள்...
நீயும் அப்படித்தான்
என் முகத்தில் அடிக்கடி
வார்த்தைகளை வீசிவிட்டுப் போவாய்
என்வார்த்தைகள் வீதி முழுவதும்
சவப்பூக்களாய்ச் சிதைந்திருக்கும்....
அவள் தன் வீட்டிற்குச் சென்றதும்
நினைவுகளை
தலையணையில் புதைத்து அழுகிறாள்...
மெல்ல விடியும் போது
காமிரா அவன் சவத்தைக் காட்டுகிறது...
இதுவென்ன முடிவு?
எல்லோரும் கைதட்டினார்கள்...
நான் சவமாக வெளியேறுகிறேன்...
உன் சமாதியில் பூத்திருக்கும்
அந்தக் காதல் பூக்களை இரசிப்பதற்காக!
- மு.முகமது பாட்சா*
04 /02 /2019
No comments:
Post a Comment