Monday, 4 February 2019

நினைவுகூறல்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், பூ

அவர்கள் எல்லோரும் கூடி நின்று 
மலர்களை அடுக்குகிறார்கள் 
வாசனைத்திரவியங்கள் தெளிக்கப்பட்டு 
மணக்கிறது... 
நினைவு கூறலென்று 
5 நிமிட மௌனம் பரவுகிறது... 
மகள் ஆசையாகக் கேட்ட பொம்மை, 
எப்படியும் வாங்க நினைத்த ஐ ஃபோன் , 
பதிவுக்காகக் காத்திருக்கும் 
50 ஏக்கர் நிலம், 
மனைவி கேட்ட நெக்லஸ், 
மகன் திருமணத்திற்கான ஏற்பாடு 
இத்துணையும் ஆக்கிரமிக்க 
விரைந்து 
5 நிமிடங்கள் கடந்து விடுகின்றன... 

ஆறடியென்பது 
எப்படியும் கிடைத்துவிடுவதால்....
அதைப்பற்றிச் சிந்திக்காமல் 
அவர்கள் அங்கிருந்து நகர்ந்தவுடன் 
அந்தச் சமாதி மட்டும் 
தனியாகச் சிந்தித்துக் கொண்டிருக்கிறது. 

- மு.முகமது பாட்சா*
05 /02 /2019

No comments:

Post a Comment

Popular Posts