
அவர்கள் எல்லோரும் கூடி நின்று
மலர்களை அடுக்குகிறார்கள்
வாசனைத்திரவியங்கள் தெளிக்கப்பட்டு
மணக்கிறது...
நினைவு கூறலென்று
5 நிமிட மௌனம் பரவுகிறது...
மகள் ஆசையாகக் கேட்ட பொம்மை,
எப்படியும் வாங்க நினைத்த ஐ ஃபோன் ,
பதிவுக்காகக் காத்திருக்கும்
50 ஏக்கர் நிலம்,
மனைவி கேட்ட நெக்லஸ்,
மகன் திருமணத்திற்கான ஏற்பாடு
இத்துணையும் ஆக்கிரமிக்க
விரைந்து
5 நிமிடங்கள் கடந்து விடுகின்றன...
ஆறடியென்பது
எப்படியும் கிடைத்துவிடுவதால்....
அதைப்பற்றிச் சிந்திக்காமல்
அவர்கள் அங்கிருந்து நகர்ந்தவுடன்
அந்தச் சமாதி மட்டும்
தனியாகச் சிந்தித்துக் கொண்டிருக்கிறது.
- மு.முகமது பாட்சா*
05 /02 /2019
No comments:
Post a Comment