Saturday, 9 February 2019

தேசாந்திரியின் காதல்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

நான் உன்னை நேசிக்கிறேன் 
என் வார்த்தைகள் 
மிக உயரத்தில் உட்கார்ந்திருக்க 
நான் மட்டும் 
மெதுவாகக் கீழே விழுகிறேன்... 
உன்னிடம் பேசுவதற்கு 
என்னிடம் வார்த்தைகளில்லை 
நீ என் கண்களில் 
குளித்துக்கொண்டிருக்கிறாய் 
நீதான் 
என் கவிதைகளையும் எழுதுகிறாய்... 
நான் தேசாந்திரியாகத் திரிகிறேன் 
என் நிழல் 
உன்னையே சுமந்து திரிகிறது... 
என் காற்றில் 
உன் பெயர் எழுதியிருக்க 
என் சுவாசம் மூச்சிறைக்கிறது... 
காதல் ஓய்வெடுக்குமிடத்தில் 
ஒரு கல்லறை நிச்சயமிருக்கும்... 
அதன் வாசகங்களை 
நான் எப்போது எழுதப்போகிறேன்? 

- மு.முகமது பாட்சா* 
09 /02 /2019 

No comments:

Post a Comment

Popular Posts