Wednesday, 6 February 2019

கடலாகும் நாட்குறிப்பு

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வானம், சமுத்திரம், மேகம், வெளிப்புறம், தண்ணீர் மற்றும் இயற்கை

அது நாட்குறிப்பல்ல 
ஒரு கடலின் அகன்றக்கரை 
அலைகள் எப்போதும் 
தழுவிக்கொண்டேயிருக்கின்றன... 
சீற்றத்தின்போது 
எழுத்துகளும் நெளிந்து ஆக்ரோஷிக்கிறது 
நான் மீன் பிடிக்கும்போது 
தலையை வருடித் தாயாகிறது... 
ஆழ்கடலுக்குள் சுமந்து சென்று 
நீச்சல் பழக்குகிறது... 
தொலைவானத்தைக் காண 
தோள்களில் சுமந்து உயரம் கூட்டுகிறது... 
கடல் குட்டையாகும் போது 
நான் கடலாகிறேன்... 
குட்டையின் பெருமிருமல் 
அலைகளின் சப்தத்தில் கேட்கவில்லை... 
குட்டை மட்டமானவுடன்... 
அந்த நாட்குறிப்பு 
மீண்டும் கடலாகி என்னைத் தழுவுகிறது... 
அது நாட்குறிப்பல்ல 
ஒரு கடலின் அகன்றக்கரை . 

- மு.முகமது பாட்சா* 
06 /02/2019 

No comments:

Post a Comment

Popular Posts