
அந்தக் கதை
என்னருகில் வந்து அமர்ந்தது...
அதன் இருமல் சப்தம்
கோழையோடு தொண்டைக்கமறி
வீதியில் விழ
சற்று நகர்ந்து கொண்டேன்...
முதுமைப் படரா வயதுதான்...
முழு நிலவென்று
பதின்மத்தில்
பாராட்டுக்கவிதைகள் வாங்கியிருக்கலாம்...
சிறகொடிந்திருந்தது...
தாய்மைச் சூப்பா முலைகளில்
வன்மம் சூப்பிச் சூம்பிக்கிடக்க...
மாராப்பை விலக்கி வைத்தது...
'பசிக்குது காசு தர்ரீயா' என்று கேட்டக் கதை
'தாங்க்ஸ்' சொல்லிவிட்டு நகர்ந்தபோது
'வர்ரீயா...' என்று கேட்டு மதர்வுடன்
மாராப்பை விலக்கி நின்றது
தொடரும் போட்ட மற்றொரு கதை.
- மு.முகமது பாட்சா*
10 /02 /2019
No comments:
Post a Comment