
' நீ நல்லாவே இருக்க மாட்ட '
அவன் சபித்தபோது
முகத்தைக் கழற்றி
தன் கைகளில் வைத்திருந்தான்...
நோயில் விழுந்தவனைப் பார்த்தவன்
'சாபம் பலித்தது' என்று
மனசோடு சிரித்துக்கொண்டான்...
விளக்குப்போட்டு
சிலர் சபித்துக் கொண்டிருந்தார்கள்....
சாபம்
மதுக்கடைகளைச் சுற்றி வந்தது...
கோவில்களில் கூட சாபம்
பிரார்த்தனை செய்துகொண்டிருந்தது...
வயிறு எரிகிறது என்பதும் கூட
ஏழைகளின் சாபமாக இருக்கலாம்...
சாபம் என்பது
இராக்கதனின் வேதமென்றும் - சிலர்
சத்தியத்தின் குரலென்றும்
சொல்கிறார்கள்....
சாபம் என்பது பொய்யாகவும் இருக்கலாம்
தேசத்தின் சாபம்
ஆட்சி செய்பவர்களை
சற்றும் அசைத்தே பார்த்ததில்லை.
- மு.முகமது பாட்சா*
06 /01 /2019
No comments:
Post a Comment