Saturday, 23 February 2019

அதிசய மனிதர்கள் (தேர்தல்)

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

கோடாரியால்
கடல் நீரைப் பிளந்து கொண்டிருந்தவர்களை
வேடிக்கை பார்க்கிறது ஒரு கூட்டம்...
பட்டத்தால்
ஆகாயத்தை இழுப்பதாக
ஒருவன் சொல்லிக் கொண்டு திரிகிறான்
சிலைகளை வைத்தால்
சிந்தனை வளரும் என்பது
தேசியகீதத்தில் சேர்ந்து கொள்கிறது...
அருள் வேண்டி 
ஆலய வாசல்கள் நிறைந்திருக்கக்
கடவுள்கள் 
முகம் திருப்பிப் போய்க் கொண்டிருக்கிறார்கள்...
நல்லவர்கள்
நாற்புறமும் சூழ்ந்து கொள்கிறார்கள்...
வாக்குப்பெட்டிகள்
யாகம் வார்த்துத் தவம் கிடக்க
ஏழைகளின் வாசல் 
எப்போதும் போல் இருட்டாகவேயிருக்கிறது.



- மு.முகமது பாட்சா*
24 /02 /2019

1 comment:

Popular Posts