Thursday, 28 March 2019

எப்படிச்சொல்வேன்?

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் பலர் உறங்கிக் கொண்டிருக்கின்றனர்

நிலவைப் பார்த்து 
என்னவென்று கேட்டவள் - இப்போதும் 
ஆதிரை பாட்டி 
அங்கேயே இருப்பதாக நம்புகிறாள்... 
முத்தமென்பது - அன்பின் 
மொழியென்று மட்டுமே அறிந்தவள், 
மிச்சமில்லாமல் இறைக்கிறாள்... 
குட்டி பொம்மைக்குப் பாலூட்டித் 
தாயாகிறாள்... 
கதைசொல்லும் வேளையில் ம் கூட்டி 
இடைவெளி நிறைக்கிறாள்... 
பச்சரிப் பற்களைக்காட்டிப் 
பழிக்கும் என் செல்ல மகளிடம் 
எப்படிச்சொல்வேன்... 
தேவதைகள் இங்கு வாழ்வதற்காக 
கற்றுக் கொள்ளும் வித்தையை.........? 

- முகமது பாட்சா*
29/03/2019

No comments:

Post a Comment

Popular Posts