எச்சில் இலைகள்

மரத்துப்போன மண்டைக்குள்
கோபம் தாபங்கள் இறந்து கிடக்கின்றன...
ஆசைகளைக் கழற்றிவைக்க
யோகிகளைத் தேடிச் செல்கிறார்கள்...
ஆசை
அவர்களிடம்தான்
அம்மணமாய்ச் சிரிக்கிறது...
புத்த விகாரங்களெல்லாம் - இப்போது
செல்வந்தர்களிடம்
காட்சிப் பொருட்களாக மாறிவிட்டன...
ரூபாய் நோட்டுகளில்தான்
சாந்தி ஸ்தூபம் உயர்ந்து நிற்கிறது...
வீதியில் வாழ்பவர்களை
எச்சில் இலையென்று சொல்கிறீர்கள்...
பிச்சைக்காரர்களிடம்தான்
புத்தன் உட்கார்ந்திருக்கிறான் என்பதை
மறந்து விட்டீர்கள்.
- மு.முகமது பாட்சா*
02/04/2019
No comments:
Post a Comment