
முல்லாவை தேடிக் கொண்டிருக்கிறார்கள்
கழுதையோடு காணாமல் போய்விட்டதாகப்
பிராது பதிவாகிறது..
கழுதை அவருடையதுதான் என்றாலும்
கட்டியிருந்த கயிறு கடன் வாங்கியது...
கயிறுதானே என்று கேட்கலாம்
அஃதொரு ஒட்டகத்தைக் கட்டியிருந்த கயிறு
அதனால்?
ஒட்டகம்தான் இப்போது ஓடிவிட்டதே.....
ஒட்டகத்தைத்தானே தேட வேண்டும் ?
அதைக் கட்டிப்போடக் கயிறு வேண்டுமே...
ஒட்டகம் யாருடையது?
அமைச்சரின் வைப்பாட்டி உடையது
அவளிடமே கேட்க வேண்டியதுதானே...?
அதற்கும் கூட முல்லா கிடைக்கவேண்டும்...
ஏன்?
முல்லா காணவில்லையென்று
பிராது கொடுத்தவளே அவள்தான்...
-மு. முகமது பாட்சா*
02/07/2019
No comments:
Post a Comment