Wednesday, 24 July 2019

விதுரம் கோர்த்த மழை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், அமர்ந்துள்ளார் மற்றும் உட்புறம்

விதுரம் கோர்த்த மழையில் 
கண்களை ஊசலாட்டிக் கொண்டிருக்கிறேன்... 
நினைவுகளை அகலத் திறந்து 
நரம்புக்கருவிகளை இசைக்கிறாய்.... 
தோல் கருவியில் 
உரசும் விரல்களாய் 
வார்த்தைகள் உழல்கின்றன... 
பிரிவின் மௌனம் பேரண்டத்தின் பூகம்பம்... 
அடவுகளில் 
ஆடைக் கட்டும் பெரும் நிழலில் 
நான் - நீ 
நகர்ப் பறையின் உச்ச ஆரோபிதம்.

- மு.முகமது பாட்சா*
22/07/2019

1 comment:

Popular Posts