
வாக்கப் பட்ட நாளாதான்
வவுத்து வலியில் நானிருக்கேன்!
வாக்காட்டுப் பொழப்பாதான்
நீயுமெனக்கு வாச்சிருக்கே!
பூக்காட்டில் வச்சி யென்ன
புகழ் பாட வேணாம் மச்சான்!
சூக்காட்டிப் போகும் பொழப்ப
புதைச்சி வச்சாப் போதும் மச்சான்!
சோக்காளிக் கணக்காதான்
தினம் நீயும் சுத்தி வர
வெக்காளம் சூழ்ந்த வாழ்க்கை
வெளுப்பதுதான் எப்ப மச்சான்?
தக்காம ராப் பொழுதில்
சல்லித்தனம் செய்யிரியே...
வேக்காளம் தின்னே நான்
சீரழிஞ்சிப் போனேன் மச்சான்!
நாத்தம் புடிச்ச வாயால
நாயா யென் வாயை நக்கிறயே
அந்த ஊத்தப் புடிச்சச் சாராயம்
என்னையும் தான்
தினம் குடிக்கு மச்சான்!
- மு.முகமது பாட்சா*
12/05/2016
No comments:
Post a Comment