
என்
........சிறு
.................வயதில்....
நான் திருவிழாவில்
தொலைந்து போனதாக
அண்ணன் கதைப்பான்!
என்னைத் தவிட்டிற்கு வாங்கியதாக
அம்மான் சொல்வான்!
ஆஸ்பிட்டலில் மாற்றிவிட்டதாக
அப்பா சிரிப்பார்!
நான் அழுவதற்காகவே
இத்தனை பேச்சுகள்....!
ஆ
.....னா
............லு
.................ம்
இப்படி நடந்திருந்தாலும்
நன்றாக இருக்குமோ?
முதிர் கன்னியாக
எத்தனை நாள் வாழ்வது ? !
- முகமது பாட்சா*
09 /05 /2015
No comments:
Post a Comment