Sunday, 27 May 2018

ஓதுவீராக!

ரமலான் 11
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், குழந்தை மற்றும் வெளிப்புறம்

ஒரு மரத்துப் பறவைகளென்றாலும் 
தேடலின் பொருட்டே இரை கிடைக்கிறது 
தெளியாத நீரில் முகம் தெரியாது 
எறும்புகளின் உலகம் தேடல் கொண்டது 
ஓதுவீராக ! 
இறைவன் தொடங்கி வைத்த பயணம் 
இன்னமும் நடந்து கொண்டேயிருக்கிறது 
அஸ்ஸலாமு அலைக்கும் வார்த்தையில் 
துரோகத்தின் நிழல் இருப்பதில்லை 
சஜ்தாவில் இருக்கும் போது 
இறைவன் பூக்களைச் சொரியலாம்... 
தொழுகையை விட்டு விடாதீர்கள் 
பணத்தைத் தேடும்போதே 
பசித்தவனையும் தேடுவது இறைவழியாகும் 
நடக்கின்றபாதை நமக்கானது மட்டுமா? 
தேடல் மட்டுமே 
நம் கால்களுக்குச் சொந்தமாக இருக்கிறது 
சிலந்தியின் வலையில் 
சிந்தனையை வைத்துவிட்டுச் சிந்திப்பீராக! 
திருமறையின் வசனங்கள் 
கொசுவையும் உதாரணம் காட்ட மறந்ததில்லை 
ஓதுவீராக! ஓதுவீராக 
தேடலின் பொருட்டு  சிந்தனைகள் விரியட்டும். 

- மு.முகமது பாட்சா* 
28 /05 /2018 

No comments:

Post a Comment

Popular Posts