ரமலான் 7

நிழல் இங்குத் தொழுகிறது
நிஜம் அங்கு மன்றாடுகிறது
பாவத்தின் கணக்குகளை
பற்றியெரிக்கிறது நோன்புத்தீ
திக்ருகளின் ஓசைகள்
அர்ஷின் கணக்கில்
வரவு வைக்கப்படுகின்றன
எதுகை மோனைக்குள்
அடங்கவில்லை இந்தக் கவிதை
சந்திப் பிழைகளில்
அடிக்கடி சிக்கிக் கொள்கிறது
யாப்பில்லாத கவிதையில்
உயிரெழுத்தும் மெய்யெழுத்தும்
ஒட்டிக் கொண்டிருக்கின்றன
சீர் பிரிக்க முடியாத வார்த்தைகளில்
சிக்கிக் கிடக்கிறது வாழ்க்கை
எறும்புகளின்
பள்ளத் தாக்குதான் நம் உலகம்
அதன் எச்சம்தான் நம் அறிவு
தேனீக்களின் சிறகுகளில் கூட
ஒட்டியில்லாதது நம் உழைப்பு
கற்பனைக்குள் வாழ்கிறவன்
காகத்தின் சிறகை
எப்படித் தொடமுடியும்?
நிழல் இங்குத் தொழுகிறது
நிஜம் அங்கு மன்றாடுகிறது .
- மு.முகமது பாட்சா*
24 /05 /2018

நிழல் இங்குத் தொழுகிறது
நிஜம் அங்கு மன்றாடுகிறது
பாவத்தின் கணக்குகளை
பற்றியெரிக்கிறது நோன்புத்தீ
திக்ருகளின் ஓசைகள்
அர்ஷின் கணக்கில்
வரவு வைக்கப்படுகின்றன
எதுகை மோனைக்குள்
அடங்கவில்லை இந்தக் கவிதை
சந்திப் பிழைகளில்
அடிக்கடி சிக்கிக் கொள்கிறது
யாப்பில்லாத கவிதையில்
உயிரெழுத்தும் மெய்யெழுத்தும்
ஒட்டிக் கொண்டிருக்கின்றன
சீர் பிரிக்க முடியாத வார்த்தைகளில்
சிக்கிக் கிடக்கிறது வாழ்க்கை
எறும்புகளின்
பள்ளத் தாக்குதான் நம் உலகம்
அதன் எச்சம்தான் நம் அறிவு
தேனீக்களின் சிறகுகளில் கூட
ஒட்டியில்லாதது நம் உழைப்பு
கற்பனைக்குள் வாழ்கிறவன்
காகத்தின் சிறகை
எப்படித் தொடமுடியும்?
நிழல் இங்குத் தொழுகிறது
நிஜம் அங்கு மன்றாடுகிறது .
- மு.முகமது பாட்சா*
24 /05 /2018
No comments:
Post a Comment