Thursday, 24 May 2018

நிழல் இங்குத் தொழுகிறது

ரமலான் 7
படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர், ட்விலைட், சமுத்திரம், வானம், தொப்பி, வெளிப்புறம் மற்றும் தண்ணீர்

நிழல் இங்குத் தொழுகிறது 
நிஜம் அங்கு மன்றாடுகிறது 

பாவத்தின் கணக்குகளை 
பற்றியெரிக்கிறது நோன்புத்தீ 

திக்ருகளின் ஓசைகள் 
அர்ஷின் கணக்கில் 
வரவு வைக்கப்படுகின்றன 

எதுகை மோனைக்குள் 
அடங்கவில்லை இந்தக் கவிதை 

சந்திப் பிழைகளில் 
அடிக்கடி சிக்கிக் கொள்கிறது 

யாப்பில்லாத கவிதையில் 
உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் 
ஒட்டிக் கொண்டிருக்கின்றன 

சீர் பிரிக்க முடியாத வார்த்தைகளில் 
சிக்கிக் கிடக்கிறது வாழ்க்கை 

எறும்புகளின் 
பள்ளத் தாக்குதான் நம் உலகம் 
அதன் எச்சம்தான் நம் அறிவு 

தேனீக்களின் சிறகுகளில் கூட 
ஒட்டியில்லாதது நம் உழைப்பு 

கற்பனைக்குள் வாழ்கிறவன் 
காகத்தின் சிறகை 
எப்படித் தொடமுடியும்? 

நிழல் இங்குத் தொழுகிறது 
நிஜம் அங்கு மன்றாடுகிறது .

- மு.முகமது பாட்சா*
24 /05 /2018

No comments:

Post a Comment

Popular Posts