ரமலான் 9

இரவின் கருணை
மிகப்பெரியது
நிழலையே குடையாக
விரித்திருக்கிறது
வானம்
நட்சத்திர விளக்குகளை
யாருக்குக் கட்டியிருக்கும்
இந்த இரவு?
நம்மோடு நடந்து வரும்
நிலவைப் போல்
சூரியனென்றும் இருந்ததில்லை
அல்லியின் சுதந்திரம்
இரவில்தான் மலர்கிறது
அதனால்தான்
வரிசைக் கட்டி நிற்கிறதோ
தராவிஹ் தொழுகை
குர்ஆனின் வசனங்கள்
துல்லியமாகக் கேட்கின்றன
அமைதிக்குள்
நுழையும் மனம்
என்றும் ஆர்ப்பரிப்பதில்லை
கருணையைக்
கற்றுக் கொடுக்கிறது
அழகிய ரமலான்
விரைந்து வாருங்கள்
இந்த இரவு பள்ளி
இப்போது திறந்திருக்கிறது.
- மு.முகமது பாட்சா*
26 /05 /2018

இரவின் கருணை
மிகப்பெரியது
நிழலையே குடையாக
விரித்திருக்கிறது
வானம்
நட்சத்திர விளக்குகளை
யாருக்குக் கட்டியிருக்கும்
இந்த இரவு?
நம்மோடு நடந்து வரும்
நிலவைப் போல்
சூரியனென்றும் இருந்ததில்லை
அல்லியின் சுதந்திரம்
இரவில்தான் மலர்கிறது
அதனால்தான்
வரிசைக் கட்டி நிற்கிறதோ
தராவிஹ் தொழுகை
குர்ஆனின் வசனங்கள்
துல்லியமாகக் கேட்கின்றன
அமைதிக்குள்
நுழையும் மனம்
என்றும் ஆர்ப்பரிப்பதில்லை
கருணையைக்
கற்றுக் கொடுக்கிறது
அழகிய ரமலான்
விரைந்து வாருங்கள்
இந்த இரவு பள்ளி
இப்போது திறந்திருக்கிறது.
- மு.முகமது பாட்சா*
26 /05 /2018
No comments:
Post a Comment