Saturday, 26 May 2018

சுவனம் எப்படியிருக்கும்?

ரமலான் 10


சுவனத்தைத் தேடியொருவன் அலைகிறான் 
சுவனம் எப்படியிருக்கும்? 
நரகத்தின் வாசல்கூட 
அலங்காரத்துடன் இருக்குமென்று 
ஒரு சூபிக்கவிதை சொல்கிறது 
தாயின் கண்ணீரில் நரகம் இருக்குமென்றால் 
துடைத்துவிடு சுவனம் கிடைக்குமென்று 
நாடோடியொருவன் பாடுகிறான் 
சுவனத்திற்காக மட்டுமே தொழுகிறவன் 
அல்லாஹூவை மறந்து விட்டவன் 
இரக்கமில்லாத தர்மம் 
சுவனத்தின் காற்றைக்கூடக் காட்டாது 
அடுத்த வீட்டின் அழுகையை அறியாதவன் 
தன் வீட்டில் இருக்க அருகதையற்றவன் 
உறவுகளைக் கழுவிவிட்டு பிறருக்காய் 
தேடித்தேடிச் செய்யும் உதவிகள் 
வேசமென்பது இறைவனுக்குத் தெரியும் 
சாய்ந்து கொள்ளத் தோள் கொடுக்காதவன் 
தான் சாய்ந்து கொள்ள 
சுவனம் கேட்பது எப்படிச் சரியாகும்? 
சுவனத்தைத் தேடியொருவன் அலைகிறான் 
சுவனம் எப்படியிருக்கும்? 

- மு.முகமது பாட்சா* 
27 /05 /2018 

No comments:

Post a Comment

Popular Posts