Thursday, 24 May 2018

இமாமை பின் தொடர்ந்து

ரமலான் 8 
தானியங்கு மாற்று உரை இல்லை.

மரணம் 
நம் வாசல் கதவைத் தட்டுகிறது 
வாத்தியக் கருவிகளோடு 
இசையில் இலயிக்கிறோம் 

மறை குர்ஆனின் ஆயத்துகளை 
விரல்கள் மேய்கின்றன 
சிந்தனைகள் 
ஊர் சுற்றிவிட்டுத் திரும்புகின்றது 

இமாமைப் பின் தொடர்ந்து 
'அல்லா ஹூ அக்பர்' சொல்கிறோம் 
சலாம் கொடுத்த பிறகுதான் 
உள்ளே நுழைகிறோம் 

ஏந்திய துவாக்களில் தவறியும் 
நாங்கள் 
எங்களைவிட்டு நகர்வதேயில்லை 

கையில்லாதவனுக்கும் இட்ட காசை 
காட்சியாக்கி மகிழ்கிறோம் 

எட்டாம் நோன்பிலும் இயக்கங்கள் 
இப்படித்தான் நகர்கின்றன 

இபாபத்தின் சிறகுகள் 
இன்னமும் அப்படியேதான் இருக்கின்றது 

இலாபத்தின் கணக்குகளை நாங்கள் 
பார்த்துக் கொண்டே திரிகிறோம் 

கபரின் குழிகள் மட்டும் 
காற்றை நிரப்பிக் காத்துக் கிடக்கிறது. 

- மு.முகமது பாட்சா* 
25/05/2018 

No comments:

Post a Comment

Popular Posts