Friday, 18 May 2018

மனதோடு யுத்தம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உட்புறம்

ரமலான் 2

மனதோடு 
ஒரு யுத்தம் தொடங்கி விட்டதால் 

பசியென்ற படகிலேறி 
பயணத்தைத் தொடங்கிவிட்டோம் 

நிலவு தன் முகத்தை 
முறுவல் கூட்டி வரவேற்கிறது 

விழித்திருக்கும் இரவுகள் 
எம்மைத் தினந்தினம் படிக்கின்றன... 

தொழுகைக்குள் தொலைந்து போவது 
தேடுவதற்காகவே 

விழித்திருப்பதும் பசித்திருப்பதும் 
ஒரு கடும் யுத்தத்தின் முகாந்திரம் 

கழன்று போகும் கள்ளம் 
வெறுப்புடன் பார்த்துவிட்டு நகர்கின்றது 

இப்தாரின் உணவுகளும் 
பசியின் சுவையைக் கூட்டுகின்றன 

நான் கழன்று நாமாகிறோம் 

கைகளைத் திறந்தால் 
கருணையின் கண்கள் திறந்து கொள்கின்றன 

ரமலான் புனிதமாகிறது 
மனங்களோடு மனிதன் யுத்தம் செய்வதால் 

தர்மம்தான் சுவனமென்றால் 
அது நம் கண் முன்னேதான் இருக்கிறது... 

நரகத்தை வெறுத்திடுங்கள். 

- மு.முகமது பாட்சா* 
18/05/2018 

No comments:

Post a Comment

Popular Posts