ரமலான் 13

முதுகின் பக்கம்
முழுவதுமாகத் தெரிவதில்லை
புறம் பேசாதீர்கள்
கழுவியும் கறை போகாத நாக்கு
கல்வியைச் சொல்லித் தருமா?
எடுத்த வாந்தியை மீண்டும்
யாராவது எடுத்து உண்பார்களா?
கலகத்தின் பிரதிக்கு ஆயிரம் நாவுகள்
கோட்சொல்லல் என்பது
நரகத்தின் முதல் படி
அடுத்த வீட்டின் அழுக்குகளை
நாம் ஏன் பூசிக் கொள்ள வேண்டும்?
சகோதரனின் மாமிசம்
அத்துணை ருசியா?
நாவிற்கு அடிமைப் பட்டவன்
நலவிற்கு மிகத் தூரமாகிப் போகிறான்
சாத்தானின் நாக்கை வைத்து
சொறிந்து கொள்கிறோம்
கபரிலும் அணையாத
தீயென்பது நபிகளின்(ஸல்) வாக்கு
முதுகின் பக்கம்
முழுவதுமாகத் தெரிவதில்லை
எப்போதும் புறம் பேசாதீர்கள் .
- மு.முகமது பாட்சா*
29 /05 /2018

முதுகின் பக்கம்
முழுவதுமாகத் தெரிவதில்லை
புறம் பேசாதீர்கள்
கழுவியும் கறை போகாத நாக்கு
கல்வியைச் சொல்லித் தருமா?
எடுத்த வாந்தியை மீண்டும்
யாராவது எடுத்து உண்பார்களா?
கலகத்தின் பிரதிக்கு ஆயிரம் நாவுகள்
கோட்சொல்லல் என்பது
நரகத்தின் முதல் படி
அடுத்த வீட்டின் அழுக்குகளை
நாம் ஏன் பூசிக் கொள்ள வேண்டும்?
சகோதரனின் மாமிசம்
அத்துணை ருசியா?
நாவிற்கு அடிமைப் பட்டவன்
நலவிற்கு மிகத் தூரமாகிப் போகிறான்
சாத்தானின் நாக்கை வைத்து
சொறிந்து கொள்கிறோம்
கபரிலும் அணையாத
தீயென்பது நபிகளின்(ஸல்) வாக்கு
முதுகின் பக்கம்
முழுவதுமாகத் தெரிவதில்லை
எப்போதும் புறம் பேசாதீர்கள் .
- மு.முகமது பாட்சா*
29 /05 /2018
No comments:
Post a Comment