Thursday, 31 May 2018

இப்போது அவன்

தானியங்கு மாற்று உரை இல்லை.

சிகரெட்டை 
தூக்கிப்போட்டுப் பிடித்த போது 
அவனும் அப்படித்தான் 
முயற்சித்துக் கொண்டிருந்தான் 

அவன் அப்பாவின் சவுக்கடி 
அவனுக்கு மரத்திருந்தது 

'இது எப்படியிருக்கு' என்று 
பூவிற்கும் தனத்தை இழுத்து 
அவள் புருஷனிடம் 
மொத்தடி வாங்கினான் 

செல்வியக்காவின் புடவையில் 
ஓட்டைப் போட்டபோதுதான் 
ஊரே அவனை விரட்டியது 

நேற்றுதான் அவனைப் பார்த்தேன் 
ஏளனமாக என்னைப் பார்த்துவிட்டு 
ஏதாவது ஆகனும்னா 
என்னை வந்து பாரென்றான் 

அவன் கொடுத்த அட்டையில் 
அவன் கட்சியின் பெயரும் இருந்தது.

-மு. முகமது பாட்சா*
31 /05 /2018

No comments:

Post a Comment

Popular Posts