
எண்களை
வைத்துக் கொண்டு விளையாடுவது
சிலருக்குப் பிடித்து விட்டது
மதிப்பெண்களின் வாசலில்
மாணவர்கள் வரிசையில் நிற்கிறார்கள்
இலக்கை நிர்ணயிக்காமல் ஓடச் சொன்னால்
அவர்கள் எங்கே ஓடிப் போய் நிற்பார்கள்?
கலைமகள் தன் வீணையின் நரம்புகளை
எண்ணிக் கொண்டேயிருக்கிறாள்...
கால் விலங்குகளில்
கரையான்கள் கூடு கட்டியிருக்கின்றன
எண்கள்தான் கல்வியை நிர்ணயிக்கின்றது
தகுதியென்பது
எண்களுக்குள் அடங்கி விட்டதால்
திறமையென்பது தூக்கில் தொங்குகிறது
தேர்தல் களங்களில் மட்டும்
எண்கள் விலைக்கு வாங்கப்படுகின்றன
எண்களுக்குள் சிறை வைத்தவர்கள்
பிள்ளைகளை
எப்போதும் தேடிக் கொண்டேயிருக்கிறார்கள்
ஏலம் 1 ஏலம் 2
வியாபாரம் தொடங்கிவிட்டது
சந்தை வாசலில் நிற்பது நம் பிள்ளைகள்தான்.
- மு.முகமது பாட்சா*
16 /05 /2018
No comments:
Post a Comment