ரமலான் 12

சொல்லம்புகளில் சிக்கிக்கொண்டு
சிலர் வீழ்ந்து கிடக்கிறார்கள்
வார்த்தைகளென்பது வரமளித்தது
வரவு செலவுகளில் கச்சிதம் தேவை
தூற்றிய வார்த்தைகளை
துடைப்பத்தாலும் வார முடியாது
வார்த்தைகளை வசீகரிக்கத் தெரிந்தவன்
வாழ்க்கையை இரசிக்கிறான்
நல் வார்த்தைகளை
நயமாகப் பகரச்சொல்கிறான் அல்லாஹ்
- (அல்பகறா, அல் இஸ்ரா 53 ) -
புறத்தின் தூய்மை நீர் கொண்டு
அகத்தின் தூய்மை வாய்மொழியாகும்
பரிகாச வார்த்தைகள்
நரகத்தில் மின்னும் எரி நட்சத்திரங்கள்
ஏளன வார்த்தைகள் திரும்பி வந்துவிடும்
பூமராங்காகும்.
ஸலாம் என்பது அழகிய வார்த்தையாம்
அதை விட்டு விடாதீர்கள்...
சோதரரே சுவனத்தின் வாசமே
நல் வார்த்தைகளின் சுவாசம்தான்.
- மு.முகமது பாட்சா*
28 /05 /2018

சொல்லம்புகளில் சிக்கிக்கொண்டு
சிலர் வீழ்ந்து கிடக்கிறார்கள்
வார்த்தைகளென்பது வரமளித்தது
வரவு செலவுகளில் கச்சிதம் தேவை
தூற்றிய வார்த்தைகளை
துடைப்பத்தாலும் வார முடியாது
வார்த்தைகளை வசீகரிக்கத் தெரிந்தவன்
வாழ்க்கையை இரசிக்கிறான்
நல் வார்த்தைகளை
நயமாகப் பகரச்சொல்கிறான் அல்லாஹ்
- (அல்பகறா, அல் இஸ்ரா 53 ) -
புறத்தின் தூய்மை நீர் கொண்டு
அகத்தின் தூய்மை வாய்மொழியாகும்
பரிகாச வார்த்தைகள்
நரகத்தில் மின்னும் எரி நட்சத்திரங்கள்
ஏளன வார்த்தைகள் திரும்பி வந்துவிடும்
பூமராங்காகும்.
ஸலாம் என்பது அழகிய வார்த்தையாம்
அதை விட்டு விடாதீர்கள்...
சோதரரே சுவனத்தின் வாசமே
நல் வார்த்தைகளின் சுவாசம்தான்.
- மு.முகமது பாட்சா*
28 /05 /2018
No comments:
Post a Comment