ரமலான் 6

இருட்டிற்குள்
வெளிச்சத்தைப் புதைத்துவிட்டு
விளக்கைத் தேடுகிறோம்.
விளக்கு எரிவதற்கு
எண்ணெய், திரியைத் தேடுகிறது
தீக்குச்சி மட்டும் இங்குக் காத்திருப்பில்
வெளிச்சமென்பதே
இருட்டிலிருந்துதான் வெளிவருகிறது
இரவு மட்டும் இல்லையென்றால்
பகல் எப்போதும்
பைத்தியம் பிடித்தே திரியும்.
கறுத்த இதயங்களை
இறைவன் கணக்கில் வைத்திருக்கிறான்
வார்த்தைகளென்பது அலங்காரமானது
தொழுகையென்பது நடிப்பாகிப் போனால்
தொப்பியும் தாடியும் கூட
சுவனம் செல்லாது
சுருக்கிக் கொண்ட கைகளில்
தஸ்பீகள்
வெறும் மணிகள் மட்டுமே.
யாரும்
யாருக்கும் தர்மம் செய்யலாம்.
புன்னகை கூட ஒரு தர்மம்தான்
ஏழையும் கூட அதில் கொடையாளி.
ஈகையென்பதே பேரீச்சம் கனி
பேரீச்சம் கொண்டே நோன்பைத் திறங்கள்
- மு.முகமது பாட்சா*
23/05/2018

இருட்டிற்குள்
வெளிச்சத்தைப் புதைத்துவிட்டு
விளக்கைத் தேடுகிறோம்.
விளக்கு எரிவதற்கு
எண்ணெய், திரியைத் தேடுகிறது
தீக்குச்சி மட்டும் இங்குக் காத்திருப்பில்
வெளிச்சமென்பதே
இருட்டிலிருந்துதான் வெளிவருகிறது
இரவு மட்டும் இல்லையென்றால்
பகல் எப்போதும்
பைத்தியம் பிடித்தே திரியும்.
கறுத்த இதயங்களை
இறைவன் கணக்கில் வைத்திருக்கிறான்
வார்த்தைகளென்பது அலங்காரமானது
தொழுகையென்பது நடிப்பாகிப் போனால்
தொப்பியும் தாடியும் கூட
சுவனம் செல்லாது
சுருக்கிக் கொண்ட கைகளில்
தஸ்பீகள்
வெறும் மணிகள் மட்டுமே.
யாரும்
யாருக்கும் தர்மம் செய்யலாம்.
புன்னகை கூட ஒரு தர்மம்தான்
ஏழையும் கூட அதில் கொடையாளி.
ஈகையென்பதே பேரீச்சம் கனி
பேரீச்சம் கொண்டே நோன்பைத் திறங்கள்
- மு.முகமது பாட்சா*
23/05/2018
No comments:
Post a Comment