Sunday, 13 May 2018

எழுதுங்கள் கவிதைகளை

தானியங்கு மாற்று உரை இல்லை.

இசை குறிப்பிற்கு எழுதியக் கவிதை 
காற்றில் மெல்லப் பறந்து போகிறது... 
நடந்து போகும் நாடோடி பாடல் 
நான்கு பேருடன் பேசிக் கொண்டிருக்கிறது... 
இரவுப் பாடகன் எப்போதும் 
நிலவைப் பற்றியே பாடிக் கொண்டிருக்கிறான் 
நவீனம் நாள் காட்டியாக கிழிந்து 
கால எந்திர உள்ளீடாக உட்கார்ந்து கொள்ள... 
பாஷோவின் பழைய குளத்தில் 
மீன்கள் இப்போதும் துள்ளி குதிக்கின்றன 
ஆருடன் எழுதிய கவிதையில் 
நட்சத்திரங்கள் இடம் மாறுகின்றன
தோட்டத்தில் ஒன்றிரண்டு கள்ளிப் பூத்தாலும் 
பூக்களென்னவோ எல்லாமே அழகுதான்.. 
நல்லதும் கெட்டதும் 
அவரவர் மனது எழுதும் கவிதைகள்... 
வார்த்தைகளைத் தேய்த்தால் 
வாசம் நிச்சயம் வரத்தான் செய்யும்
எழுதுங்கள் எழுதுங்கள் 
எழுத்திற்கில்லை எப்போதும் தோசங்கள்!

- மு.முகமது பாட்சா*
14/05/2018

No comments:

Post a Comment

Popular Posts