Wednesday, 30 May 2018

விஷக்கிருமி

படம் இதைக் கொண்டிருக்கலாம்: செடி, இரவு மற்றும் வெளிப்புறம்

கிருமிகள் 
மெதுவாகத்தான் உள்ளே நுழைகின்றன 
சாக்கடைகளில் மட்டும்தான் 
கிருமிகள் இருக்கும் என்பதில்லை 
அழகான பழங்களுக்குள் ஒளிந்திருக்கலாம் 
இனிப்பான பண்டங்களில் பதுங்கியிருக்கலாம் 
கைக்குலுக்கல்களில் கூட 
ஒட்டிக் கொண்டு உள்ளே நுழையலாம் 
தழுவும்போது அதுவும் நம்மை 
தழுவிக்கொள்ள வாய்ப்புகள் இருக்கிறது 
தும்மலாக, இருமலாக, 
சின்னக் கட்டியாக வரும் போதெல்லாம் 
அலட்சியத்தில் அதை விட்டுவிடுகிறோம். 
கிருமிகள் எப்போதுமே கிருமிகள்தான் 
அவற்றுக்கு நமது உடல்தான் இமயமலை 
ஏனென்றால் அங்குதான் 
அந்தக் கிருமிகள் தவம் செய்கின்றன.. 
காய்ச்சல் வந்த பிறகுதான் 
கண்ணடைந்தவனுக்குத் தெரிகிறது 
அஃதொரு விஷக்கிருமி. 
இனியும் ஜீவ காரூண்யம் பேசினால்... 
அதன் தவத்தைப் பற்றி யோசித்தால்... 
அதன் அழகை இரசித்துக் கொண்டிருந்தால்... 
செத்துமடி மனிதனே 
இங்கு வேறு எதுவும் வழியில்லை. 

- மு.முகமது பாட்சா* 
30 /05 /2018

No comments:

Post a Comment

Popular Posts