
எல்லாமே திடீரென்று மாறிவிடுகிறது
எல்லோருமே
திடீரென்றும் மாறிவிடுகிறார்கள்
வாய் மூடிக்கிடந்தவர்கள் பேச ஆரம்பித்தார்கள்
அப்போதுதான் தெரிந்தது
அவர்களின் வாய்
ஏன் பூட்டப்பட்டிருந்தது என்று
கிரீடத்தை
ஆணி வைத்து அறைந்து கொண்டார்கள்
வசம்பு வைத்துத் தேய்த்தாலும்
வார்த்தைகள் வளமாக வந்ததில்லை
கிடைத்த துப்பாக்கியையெடுத்து
சுட்டுசுட்டு விளையாடினார்கள்
இறந்து கிடந்தவர்களை
மடியில் வைத்து அழவும் செய்தார்கள்
இவர்கள் பரமார்த்தாவின் முட்டாள்களல்ல
முட்டாள்களின்
முகமூடி போட்ட சைக்கோக்கள்
துப்பாக்கியைப் பிடுங்குங்கள்
அல்லது துப்பாக்கியால்...........................................
கோடிட்ட இடத்தையாவது பூர்த்தி செய்யுங்கள்.
- மு.முகமது பாட்சா*
29 /05 /2018
No comments:
Post a Comment