ரமலான் 15

தொடர்பிழந்த தொலைப்பேசியில்
பேசிக்கொண்டிருக்கிறேன்
தொடர்பு எல்லைக்கு அப்பால் நின்று
தொடரும் என்று முடியாத கதையின்
கதாப்பாத்திரம் நான்
கஜானாவின் அடுக்குகளில்
கத்தை கத்தையாகப் பாவக் கரண்சிகள்
தொழுகையில் மட்டுமா கழுவமுடியும்
கண்களையும் கரங்களையும்?
தாயாரின் தஸ்பீகளில்
எனக்கான மன்னிப்புகள் எத்தனையிருக்கும்?
ஆசைகளைச் சுமக்கும் முதுகில்தான்
எத்துணை அழுக்கு மூட்டைகள்?
கலங்கிப்போன முட்டையில்
கருவிற்கேது இனி வாழ்க்கைப் பயணம்?
நாடோடி கால்களுக்கு நாற்காலி
தேவைப்பட்டபோதே
ஆசையும் துளிர்த்து விட்டது
சதக்காவும் ஜக்காத்துகளும்
வாசல் கதவை காட்டுகின்றன
மனம் மட்டும்
இரும்புப் பெட்டியில் இருக்கிறது
சாவியைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன்.
- மு.முகமது பாட்சா*
31 /05 /2018

தொடர்பிழந்த தொலைப்பேசியில்
பேசிக்கொண்டிருக்கிறேன்
தொடர்பு எல்லைக்கு அப்பால் நின்று
தொடரும் என்று முடியாத கதையின்
கதாப்பாத்திரம் நான்
கஜானாவின் அடுக்குகளில்
கத்தை கத்தையாகப் பாவக் கரண்சிகள்
தொழுகையில் மட்டுமா கழுவமுடியும்
கண்களையும் கரங்களையும்?
தாயாரின் தஸ்பீகளில்
எனக்கான மன்னிப்புகள் எத்தனையிருக்கும்?
ஆசைகளைச் சுமக்கும் முதுகில்தான்
எத்துணை அழுக்கு மூட்டைகள்?
கலங்கிப்போன முட்டையில்
கருவிற்கேது இனி வாழ்க்கைப் பயணம்?
நாடோடி கால்களுக்கு நாற்காலி
தேவைப்பட்டபோதே
ஆசையும் துளிர்த்து விட்டது
சதக்காவும் ஜக்காத்துகளும்
வாசல் கதவை காட்டுகின்றன
மனம் மட்டும்
இரும்புப் பெட்டியில் இருக்கிறது
சாவியைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன்.
- மு.முகமது பாட்சா*
31 /05 /2018
No comments:
Post a Comment