
ரமலான் 4
அறைகள் காலியாக இருக்கின்றன
காலியென்பது வெறுமையின் பொருளல்ல
ஏதோவொன்று
கண்ணிற்குத் தெரியாமல் நிறைந்திருக்கிறது
அஃது இசையாக இருக்கலாம் அல்லது
பசியாகவும் இருக்கலாம்.
வெற்றுக் கோப்பையில்
என் பார்வைகள் நிறைந்திருக்கின்றன...
அதில் தேநீர் மட்டுமே தீர்ந்துபோன ஒன்று
சுவை நாவிலும் மனதிலும் ஒட்டிக் கொள்கிறது
நபி சுலைமான் (அலை) அறிந்ததை
சாத்தான் ஜின்களின் காதுகள் அறிந்ததில்லை
கைகளை மூடிக் கொண்டு
பட்டினி கிடப்பவனின் பிணம் நாறுகிறது
இறையின் இரகசியம் வெற்றிடம்
அதன் நிறை யாருக்கு எப்படித் தெரியும்?
ஈமானில்லாத தொழுகை
சாத்தானோடுதான் சேர்ந்து தொழுகிறது
கைகளை ஏந்தினாலும்
இறைவன் மனதை மட்டுமே பார்க்கிறான்
கணக்கிட்டுத் தர்மம் செய்யுங்கள்
அரசாங்கமல்ல
அவன் கஜானாவை பார்க்காமல் போவதற்கு
விரதமென்பது பட்டினி கிடப்பது மட்டுமா?
பாவங்களைக் கழுவுவதும்தான்.
- மு.முகமது பாட்சா*
20/05/2018
No comments:
Post a Comment