Friday, 1 June 2018

யாரென்ற கேள்வி

தானியங்கு மாற்று உரை இல்லை.

யார் நீங்க? 
மோசனமான கேள்வியல்ல 
எதைக் கொண்டு வந்தாய்? 
எதைக் கொண்டு போகப் போகிறாய்? 
பகவத் கீதையில் கேட்ட கேள்வி 
கேள்விகள் கேட்காமல் 
தேர்வுகள் நடப்பதில்லை 
நீயுமா புருட்டஸ்? என்ற கேள்வி 
ஆச்சரியக்குறியானது சீசரின் வியப்பில் 
ஏலீ! ஏலீ ! என்னை ஏன் கைவிட்டீர்? 
என்பதே ஏசுவின் கடைசிக் கேள்வி 
கடவுள் என்பவன் யார்? 
சாக்ரட்டீஸின் கேள்வி சுற்றி வருகிறது 
ஏன்? எதற்கு ? எப்படி? என்ற கேள்விகளில் 
விடைத்தெரியாத ஆச்சரியங்கள் 
இருக்கின்றன 
நான் யார் ? என்ற கேள்வியை 
யாரும் இறக்கி வைக்கவில்லை 
கேள்விகளைக் கண்டு பயந்து ஓடுகிறவன் 
ஆட்சிக்காக அரிதாரம் பூசுகிறவன் 
கேள்விகள் எப்போதும் இறப்பதில்லை 
அஃது இறந்துவிட்டால் 
பதில்கள் முடமாகி மடிந்துவிடும். 

- மு.முகமது பாட்சா* 
01 /06 /2018 

No comments:

Post a Comment

Popular Posts