மாட்டுக்கறி தின்றவன்

அந்தப் பிரதேதத்தை
அங்கேயே
போட்டுவிட்டுச் சென்றார்கள்
அஃதொரு மாட்டின் தோலால்
மூடப்பட்டிருந்தது...
வாய் ஏதோ ஒரு கோஷத்தை
முழங்கிக்கொண்டிருக்க
அதன் ஆணுறுப்பை குதறிய
எச்சில்கள் ஒழுகிக் கிடந்தன...
அதனைப் பிணக்கூறாய்விற்கு
எடுத்துச் செல்லும் முன்பாக
விரிவாகக்
குற்றப்பத்திரிக்கை எழுதியவர்கள்
இப்படி முடித்திருந்தார்கள்
இவன் ஒரு தேசத் துரோகி.
-முகமது பாட்சா*
01/07/2019
No comments:
Post a Comment