Wednesday, 27 June 2018

நுண்புனை கதைகள் 4

நுண்புனை கதைகள் 4 

பசி
தானியங்கு மாற்று உரை இல்லை.

அவள் அங்கேயே நின்று 
அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் 
அவனருகில் யாருமில்லை 
அவளின் மாராப்பு சற்று விலகியிருந்தது 
பார்ப்பதற்கு மிகவும் நல்லவனாகத் தெரிந்தான் 
வேறு வழி தெரியவில்லை 
பசி வேறு வயிற்றை இறுகப்பிடித்துத் திருகியது 
கேட்டுவிடுவதென்ற முடிவிற்கு வந்தவள் 
அவனிடன் சென்று,'பசிக்குது' என்று கை நீட்டினாள் 
அவன் இப்போது 
அவள் மீது படர்ந்து கொண்டிருக்க 
நாயொன்று பசிக்காகத் திரிந்து கொண்டிருந்தது... 

- முகமது பாட்சா* 
27 /06 /2018 

No comments:

Post a Comment

Popular Posts