
பறப்பதைப் பார்த்துப் பட்டாம் பூச்சியென்கிறாய்
கோபுரத்தில் உட்கார்ந்து கொண்டால்
கும்பிடுவதற்காகுமா?
தாயங்களை உருட்டிவிட்டு
சதுரங்கக் காய்களை நகர்த்துவது வேடிக்கை
கட்டுமரப் பாடல்கள் களைப்பைப் போக்குகின்றன
மீனவன் வலையில் மீன்கள் மட்டுமல்ல...
அகன்றவெளியில் ஆசைகள் அரூபம்
தூங்கியெழுவது போல் கதைகளின் களம்
நாற்காலிகளென்றும் நடப்பது கிடையாது
ஒற்றைக் கோலென்றாலும்
ஊன்றுகோல்தான் உதவிக்கு வரும்
பயணிகளின் பரிபாசை அனைத்துமெனது
இடுகாட்டின் இடுக்குகளில் வாழ்கிறது
சொல்லப்படாத சரித்திரங்கள்
இடைச்செருகலுக்குத்தான் எத்துணைத் துள்ளல்
பறப்பதெல்லாம் பட்டாம் பூச்சிகள் கிடையாது...
-மு.முகமது பாட்சா*
28 /06 /2018
No comments:
Post a Comment