
தூக்கில் தொங்கிய பிணத்தையிறக்கி
மகுடம் சூட்டினார்கள்
பேசாத பிணமென்று எதிர்க் கட்சிகள் சாடின
அரண்மனை நாறுவதாக அந்தப்புரம் சொன்னது
ஈக்களெல்லாம்
ராஜா வாழ்கவென்று கோஷமெழுப்பின
பஞ்சமொழிந்ததாகப் புழுக்கள் பேசின
இறந்துகிடந்த மனிதர்களைக் குப்பையில் போட்டார்கள்
தூய்மை தேசமென்று எறும்புகள் பேசிக் கொண்டன
காற்றடித்தபோது
கழன்று விழுந்த எலும்புகளைச் சேகரித்தவர்கள்
ராஜா மோட்சம் பெற்றதாகச் சொன்னார்கள்
தேசம் நாறிக் கொண்டிருந்தது
வெட்டியான் கைகளோய்ந்து இறந்து கிடந்தான்.
-மு. முகமது பாட்சா*
09 /06 /2018
No comments:
Post a Comment