
சாலையோரத்தில்
அழுது கொண்டிருந்தவளின் பெயர்
நீதி தேவதையாம்
மக்களெல்லாம் காதுகளைப் பொத்தி
நடந்து செல்கிறார்கள்
செய்தித்தாள்களில்
சாதனை விளம்பரங்கள் ஜட்டி பிரா
செய்திகளாகியிருக்க
தொலைக்காட்சியில்
பிக்பாஸ், காலா, விஸ்வரூபம் பற்றி
கலந்துரையாடல்
படுத்தெழுந்தால்
வேலையென்று அறிவித்தவன்
மாயக்கண்ணாடிப் போட்டு அலைகிறான்
பேசினால் பேசினவாய் சுடப்படும்
ஆளவந்தாரின் அறிவிப்பு
நீதி தேவன்
கழற்றி வைத்த கண்ணாடியில்
கறை ஒட்டிக் கொண்டிருந்தது
இப்போதெல்லாம் கறை
நல்லதென்றே விளம்பரம் செய்கிறார்கள்
ஆம் எங்கு விட்டேன்
சாலையோரத்தில்
அழுது கொண்டிருந்தவளின் பெயர்
நீதி தேவதையாம்
- நட்புடன்.....முகமது பாட்சா*
11 /06 /2018
No comments:
Post a Comment