Saturday, 30 June 2018

நுண்புனை கதைகள் 6

நுண்புனை கதைகள் 6
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

சிலையும் அவனும்

அந்தச் சிலை அங்கேயேயிருந்தது. 
அவன் மட்டும் அடிக்கடி, அதனிடம் பேசிக் கொண்டிருப்பான் 
காதலைப் பற்றிப் பேசும்போது அவனை ஆச்சரியமாகப் பார்க்கும் 
சோகத்தைப் பகிரும் போது கருணையுடன் கேட்கும் 
அதன் கையில் ஓர் அறுவாள் இருந்தது 
அது யாரையும் வெட்டி, அவன் பார்த்ததில்லை 
அவன் காதலி இதன் காலடியில்தான் வெட்டப்பட்டு இறந்து கிடந்தாள் 
அவன் ஆக்ரோஷமாக அப்போது அதனைப் பார்த்தான் 
அஃது அவனிடம்,'நானில்லை நண்பா' என்பதுபோல் பார்த்தது 
'என்னைக் கல்லாக்கிவிட்டார்கள், 
இல்லையென்றால் அவர்களை வெட்டிவிட்டு 
உன் காதலியை காப்பாற்றியிருப்பேன்'என்று ஒரு நாள் 
அவனிடம் சொல்லிவிட்டு அழுதது 
அவளெழுதிய ஒருகவிதையை 
அதனிடம், அவன் படித்துக் காண்பித்துக் கொண்டிருந்தான் 
சிலை 
அந்தப்பக்கமாகப் போன மூவரையே வெறித்துக் கொண்டிருந்தது...

- முகமது பாட்சா*
30 /06 /2018

No comments:

Post a Comment

Popular Posts