ரமலான் 31 ( ஈகை திரு நாள்)

இனிய நோன்பின் இரவு வணக்கம்
இனிதாக விடைபெற்றது
இறைவன் முன்புதான் துவாக்களாக
எத்துணை மனுக்கள் சமர்ப்பணம்
தர்மத்தின் கதவு
நோன்பிற்கானது மட்டுமல்ல...
வாசலைத் திறந்து வையுங்கள்
வசந்தம் வந்து வீசட்டும்
நாளொரு பாடலையெழுதிய
நாடோடி வியக்கிறேன்
நானா இவற்றையெல்லாம் எழுதியது
இறைவணக்கம் எழுதாத பாட்டுக்காரன்
இறைவனுக்கு இதுதான் வணக்கம்
எழுத்துகளின் பிழையிங்கு
வார்த்தைகளை நேசிக்கிறது
ஒன்பது ஓட்டைப் புல்லாங்குழல்
காற்றுப்புகுந்ததும்
பாடலை இசைக்கிறது
சிறகுகளில்லாமல் பறப்பது கனவு
சிந்தைகளோடு பறப்பது அறிவு
மழையெனப் பெய்யும் மாமழை
இறைவனின் கருணை
மகிழம் பூக்கள்
மரணத்தின் வீச்சத்தைச் சுமக்காது
துவாக்களின் பூக்கள் சிந்திக்கிடந்தால்
சுவனத்திற்கு நிச்சயம் வழி கிடைக்கும்
அரவணைத்துக் கொள்கிறவன் சினேகிதன்
அன்பு காட்டுபவன் சகோதரன்
வாழ்த்துகளென்பது
வாசலில் தொங்கும் தோரணம்
அழகிய உணர்வுகளே
ஆன்மா சொல்லித் தருகின்ற பாடம்
சீ யென்பவன் சீக்காளி
சிந்தனையோடு திரிபவன் சீர்திருத்தவாதி
வளமென்பதும் வாழ்த்துகள்தான்
வாருங்கள்
முசபா செய்து முகமன் கூறிக் கொள்வோம்
இனிய ரமலான் நல் வாழ்த்துகள்
- மு.முகமது பாட்சா*
15 /06 /2018
No comments:
Post a Comment